நெல்லை ரஜினி ரசிகர்களின் திருமண வாழ்த்துக்கள் !
மனித நேயம் கொண்ட புனித தலைவர் ரஜினிகாந்தை போல் அவரது ரசிகர்களும் மனிதனேயதுடன் தான் இருக்கிறார்கள்.இதற்கு உதாரணமாக திரு. ரஜினிகாந்த் அவர்களின் தவபுதல்வி செல்வி ஜஸ்வர்யாக்கும் ,திரு.கஸ்தூரிராஜா தவபுதல்வன் தனுஸ் கும் 18.11.2004 வியாழன் அன்று நடைபெற்ற திருமணமும் ,திருமண தம்பதிகளும் சிறப்புற ,திருமணம் வாழ்வில் வெற்றிபெற வேண்டி நெல்லை மாவட்ட ரஜினி நற்பனி மன்ற்ம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி திரு,தாயப்பன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகி எம்.கணேசன் முன்னிலை வகித்தார். ஸிபா மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.இசக்கிமுத்து வற்வேற்று பேசினார்.உடன் ஸிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகமது ஸாபின் மற்றும் தள்வாய் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டி பேசினர்.
முன்னதாக ரஜினி ரசிகர் மன்றதினர் கே.பகவதீஸ்வரன்,எஸ்.குமார்,எஸ்.சாந்தகுமார்,பி,ராஜா,
ஆர்.முத்துகிருட்டிணன்,எஸ்.கோவிந்தா,ஏ.ராஜ்குமார் மற்றும் என்.ராஜேஸ் ஆகியோர் ரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நல்ல எண்ணம் கொண்ட ரஜினிரசிகர்களை அனைவரும் பாராட்டுவோம்.
நன்றி
நேசத்துடன்.
நெல்லைபாபா.
M.P.குறிச்சி.
தென்காசி.